மேல் மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், விழாவையொட்டி சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேல் மலையனூருக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகின்றன.