பிச்சை எடுத்து ரூ.8 லட்சம் நன்கொடை
சாய்பாபா கோவில் பணிகளுக்காக, பிச்சைக்காரர் ஒருவர் சுமார், 8 லட்சம் ரூபாயை பிச்சைஎடுத்து வழங்கி அனைவரைக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளார்.ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் யாதிரெட்டி, 73. ரிக்ஷா இழுத்து பிழைத்து வந்த அவர், வயது முதிர்வு காரணமாக, ஒரு கோவிலில், பிச்சை எடுத்து வருகிறார்.nsmimg754121nsmimgஇந்நிலையில், அவர் சேமித்து வைத்திருந்த, சுமார், 1 லட்சம் ரூபாய் பணத்தை, சாய்பாபா கோவில் மற்றும் கோசாலை மேம்பாட்டுக்காக நன்கொடையாக வழங்கினார். அவரின் இந்த செயல், அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை, கோவில் பணிகளுக்காக சுமார், 8 லட்சம் ரூபாயை, அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.