நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே புவி கடக்கும்போது நடக்கின்ற நிகழ்வே சந்திர கிரகணம். இந்த ஆண்டு நான்கு சந்திர கிரகணங்கள் நிகழவிருக்கின்றன.
அதில், நாளை 10.1.2020ல் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்திற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறது நாசா.
நாளை இரவு 10.37 மணிக்கு தொடங்கி அதிகாலை 2,42 மணி வரையிலும் கிரகணம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் இந்த கிரகணத்தை பார்க்கலாம் என்று நாசா கூறியுள்ளது.