விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற எஸ்.ஐ.க்கான எழுத்துத் தேர்வில் காவலர் ஒருவர் "பிட் " அடித்த போது பிடிபட்டார்.
எழுத்துத் தேர்வை கண்கணித்த டி.எஸ்.பி. ரவீந்திரன், அந்த காவலரை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
உடனடியாக அவரை தேர்வு எழுத அனுமதி மறுத்து, தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றி ஐ.ஜி. கணேசமூத்தி, எஸ்.பி ஜெயக்குமார் ஆகியோர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
எஸ்.ஐ. எழுத்துத் தேர்வில் பிட் அடித்து பிடிபட்டவர் அனந்தபுரம் காவலர் மணி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.