Type Here to Get Search Results !

ஊராட்சி துணை தலைவர் அதிகாரத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை


ஊராட்சி துணை தலைவர்களின் பல அதிகாரங்களை குறைக்கும் வகையில் அவர்களுக்கு ‘செக்’ வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கில் செலவு செய்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பல வேட்பாளர்கள் கட்சி மற்றும் சொந்த பலத்தாலும், பல வேட்பாளர்கள் பண பலத்தாலும் வெற்றி பெற்றனர்.இந்நிலையில் துணை தலைவர்களை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் வரும் 11 அன்று நடைபெற உள்ளது. இதில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை போன்று, ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளவர்களும் வார்டு உறுப்பினர்களை கரன்சியில் குளிப்பாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் துணை தலைவர்களின் ‘செக்’ பவரை, தமிழக அரசு பறிக்க உள்ளதாக தகவல் பரவி வருவதால், பல லட்சம் செலவு செய்துள்ள ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஊராட்சி துணைத்தலைவர் கனவில் வெற்றிபெற்ற ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறுகையில், ‘ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க பேரூராட்சி துணை தலைவர்களுக்கு ‘செக்’ பவர் ரத்து செய்யப்பட்டுள்ளது போன்று, ஊராட்சி துணை தலைவர்களின் ‘செக்’ பவரை ரத்து செய்ய ஏற்கனவே பல்வேறு சங்கத்தினர், தமிழக அரசுக்கு தேர்தலுக்கு முன்பே கோரிக்கை விடுத்திருந்தனர். 
தற்போது பெரும்பாலான ஊராட்சிகளின் துணை தலைவர் பதவி, எதிர்க்கட்சியினர் வசம் செல்ல வாய்ப்புள்ளதால் தமிழக அரசு விரைவில் ஊராட்சி துணை தலைவர்களின் ‘செக்’ பவரை பறிக்கும் அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது’ என்றனர். இதனால் பல லட்சம் செலவு செய்து உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் உள்ள துணைத் தலைவர் பதவிக்கு முயற்சிக்கும் வார்டு உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இன்னும் சிலர் துணை தலைவர் பதவியை கைவிட்டுவிடலாமா என்றும் யோசித்து வருகின்றனர்.

Top Post Ad

Below Post Ad