பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் தோனி பெயர் நீக்கப்பட்டதை தொடர்ந்து, சிஎஸ்கே அணியில் இருந்தும் விலகுவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன், தோனி நிச்சயம் விளையாடுவார். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நிச்சயம் அவர் கலந்துகொள்வார். அடுத்தாண்டு வீரர்கள் ஏலத்தில் அவரை நாங்கள் தக்கவைத்துக் கொள்வோம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.