Type Here to Get Search Results !

நாளை பாரத் பந்த் - ATM, பிற வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்

மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் நாளை (January 8) அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளதால், ஏடிஎம் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.




மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கை மற்றும் தொழிலாளர்கள் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஎன்டியூசி, ஏஐடியூசி உள்ளிட்ட (INTUC, AITUC) பத்து மத்திய தொழிற்சங்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதில் பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்களும் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதால்  ஏடிஎம் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் சங்கங்களில் தங்களது ஊழியர்கள் குறைந்த அளவே இருப்பதால்,  தங்களின் வங்கி சேவையில் மிகப்பெரிய பாதிப்பு இருக்காது என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

Top Post Ad

Below Post Ad