Type Here to Get Search Results !

டிசம்பர் 26-ம் தேதி சூரிய கிரகணம் - சபரிமலை ஐயப்பன் கோவில் 4 மணி நேரம் நடை அடைப்பு


சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சென்று அய்யப்பனை தரிசிப்பது வழக்கம்.   இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ம் தேதி மாலையில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர்.இந்நிலையில், சபரிமலை கோவிலின் நடை, சூரிய கிரகணத்தை முன்னிட்டு 26-ம் தேதி 4 மணி நேரம் அடைக்கப்படும் என  திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளது.


Top Post Ad

Below Post Ad