சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது எனவும் சுற்றுச் சூழல் துறை அனுமதிப் பெற்ற பிறகே திட்டத்தை செயல்படுத்த முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த முறையான வழிமுறைகள் பின்பற்றவில்லை எனக் கூறி, நிலம் கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.