Type Here to Get Search Results !

உடல் மீது பனி உறைந்தும் உயிர்பிழைத்த பூனை



அமெரிக்காவில் பூனை ஒன்றின் மீது பனி விழுந்து முழுவதும் உறைந்து போன நிலையில் உயிர் பிழைத்துள்ளது எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்பொழிவுடன் குளிர் காற்றும் வீசுகிறது. பல மாநிலங்களில் கால்வாய், ஆறுகள் பனிக்கட்டியாக காட்சியளிக்கின்றன. பனிப் பொழிவால் பள்ளிகள், வணிக வளாகங்கள், அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடுங்குளிருக்கு பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மொன்டானா மாநிலத்தில் பூனை ஒன்று, வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளது. வீட்டினர் பல்வேறு இடங்களில் தேடியும் பூனையை காணவில்லை. காரணம், பனிபொழிவால் அதன் உடல் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தது.

ரோட்டின் ஓரத்தில் பனி உறைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூனையை அவ்வழியே சென்றோர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். பூனையின் சாதாரண உடல் வெப்பநிலை 101 டிகிரி. இந்த பூனை மைனஸ் வெப்பநிலையில் உயிருடன் இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


Top Post Ad

Below Post Ad