Type Here to Get Search Results !

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம்: உச்ச நீதிமன்றம்






 





வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயமல்ல என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய ஆதாரை கட்டாயமாக்கி உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு உத்தரவிட்டது.



இந்த நிலையில் ஸ்ரேயா சென் மற்றும் ஜெயசத்புதே ஆகியோர் கடந்த 2018-19 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தபோது பான் -  ஆதார் இணைக்காத நிலையில் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.


 இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏகே.சிக்ரி, அப்துல்நஜீர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.


நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது:   நீதிமன்ற பரிசீலனையில் உள்ள மனுவில் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க தேவையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது


. ஆனால் வருமான வரிச் சட்டம் 139 ஏ-ன் படி பான் - ஆதார் இணைப்பு கட்டாயம். மேலும் 2 பேரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யா அவகாசம் முடிந்த நிலையில் உயர்நீ திமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அவர்கள் ஆன்லைனில் வரிக்கணக்கை தாக்கல் செய்தபோது ஆதாரை இணைப்பு வசதி அதில் இல்லை எனதெரிவித்துள்ளனர்.


 எனவே வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவை உறுதி செய்கிறோம் என்றனர்.


Top Post Ad

Below Post Ad